ஊழியர்கள் கவலை..!! போனஸில் CPF பங்கு தவறாக கழிக்கப்பட்டதா..?

ஊழியர்கள் கவலை..!! போனஸில் CPF பங்கு தவறாக கழிக்கப்பட்டதா..?

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள கெர்ரி கன்சல்டிங் என்ற தலைமை வேட்டை நிறுவனம், ஊழியர்களின் இலாபப் பகிர்விலிருந்து முதலாளியின் பங்களிப்புகளைக் கழித்ததாகவும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்திலிருந்து முதலாளியின் பங்களிப்புகளைக் கூட கழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வருங்கால வைப்பு நிதி வாரியம் (CPF Board) தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து ஊழியர்கள் புகார் அளித்தனர்.
நான்கு முன்னாள் ஊழியர்கள் தெரிவித்ததாவது, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், பின்னர் பத்துக்கும் மேற்பட்டோர் CPF வாரியத்திடம் முறையாக புகார் செய்ததாகவும் தெரிவித்தனர். CPF வாரியம் நிறுவனத்துக்கு “திருப்பிச் செலுத்தும் கோரிக்கை கடிதத்தை” அனுப்பியுள்ளது.ஆனால் தலைமை வேட்டை நிறுவனம் பதிலளிப்பதற்கு முன்பு விவரங்களை விசாரிக்க அவகாசம் கோரியுள்ளது.

முன்னாள் ஊழியர்: நான் ஏன் முதலாளி பங்கை செலுத்த வேண்டும்?

முன்னாள் ஊழியர் ஒருவரின் கணக்கில், 2023-இல் மொத்த ஈவுத்தொகை $25,130.80 ஆக இருந்தது. அதில்,


ஊழியர் CPF பங்கு – $4,080

முதலாளி CPF பங்கு – $3,468

இறுதியாக பெறப்பட்டது – $17,582.80


அவர் கூறியது,“எனது பங்கையே நான் செலுத்த வேண்டும். முதலாளியின் பங்கையும் என் சம்பளத்திலிருந்து எடுக்கப்படுவது எப்படி நியாயம் ”என்று கூறியுள்ளார்.

முன்னாள் ஊழியர்கள் கூறுகையில்,பயம் காரணமாக பேச முடியவில்லை.ஒப்பந்தங்களில் CPF கழிப்புகள் குறித்த பிரிவுகள் இருந்தாலும், அதனை எதிர்க்கத் துணியவில்லை. பணிநீக்கம் செய்யப்படுவோமோ என்ற பயம் காரணமாக, அனைவரும் மௌனமாக இருந்தனர். சமீபத்தில் இளம் ஊழியர்கள் சேர்ந்தபின்னர் தான் சிலர் தைரியமாக புகார் செய்யத் தொடங்கினர்.

நிறுவனத்தின் பதில்:
கெர்ரி கன்சல்டிங்கின் மூத்த மேலாளர் டிரிஸ்னா தெரிவித்ததாவது,“எங்களின் நடைமுறைகள் CPF விதிகளுக்கு இணங்குகின்றன. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவோம்.” ஆனால், ஊழியர்கள் அளித்த புகார்களுக்கான கேள்விகளுக்கு அவர் கருத்து தெரிவிக்க மறுத்தார்.

CPF வாரியத்தின் விளக்கம்:
CPF சட்டத்தின் படி, முதலாளிகள் தான் CPF பங்களிப்பு செலவை ஏற்க வேண்டும் என்று வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. ஊழியர் வருமானத்திலிருந்து முதலாளியின் பங்களிப்பை கழிக்க அனுமதிக்கும் எந்த ஒப்பந்தமும் சட்டவிரோதமானது.இத்தகைய வழக்குகள் கண்டறியப்பட்டால் அபராதம் அல்லது வழக்கு தொடரப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மனிதவள நிபுணர் கருத்து:

21 வருட அனுபவமுள்ள HR நிபுணர் ஜெனிஃபர் லோ கூறியதாவது,“ஊழியர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், இத்தகைய பிரிவுகள் சட்டபூர்வமல்ல. சில நிறுவனங்கள் செலவுகளை குறைக்க CPF விதிகளை மறைத்து செயல்படுகின்றன.இது முற்றிலும் சட்டவிரோதம்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு, சிங்கப்பூரில் CPF சட்டங்கள் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது. ஊழியர்களின் உரிமைகளை மீறும் எந்த நிறுவனத்துக்கும் சட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாது என்று CPF வாரியம் எச்சரித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK