சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து..!!

மரினா பே சாண்ட்ஸில் திடீரென தீ பற்றியது.

அங்குள்ள ஹோட்டல் டவர் மூன்றில் அதாவது 55 வது மாடியில் பிற்பகல் 3.30 மணி அளவில் தீ சம்பவம் ஏற்பட்டது.

காரணம்:
இந்தப் பகுதியில் மேற்கொண்ட வெல்டிங் பனியின் மூலமாக டீ ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் செய்தியை சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் தீப்பற்றிய இடத்திற்கு விரைந்து செல்லும் முன்னரே ஊழியர் ஒருவர் தீ பற்றியதை அணைத்து உள்ளதாக மெரீனா பே சாண்ட்ஸின் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஹோட்டலில் தங்குபவர்களுக்கு தீ பற்றிய பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த தீச்சம்பவத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK