நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்…..

நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.நடன இயக்குனர், நடிகர்,திரைப்பட இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர்.அவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் ஏராளமான ஊனமுற்ற ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைக்கிறார்.

அந்த வீடியோவில்,நான் டான்ஸ் மாஸ்டராக இருந்தபோதே 60 குழந்தைகளை வளர்ப்பது,ஊனமுற்றோர்களுக்கு டான்ஸ் சொல்லி கொடுப்பது,இதய அறுவை சிகிச்சை பண்ணுவது என பல்வேறு உதவிகளை செய்து வந்தேன் என்று கூறினார்.பலரிடம் என் அறக்கட்டளைக்கு உதவுமாறு கேட்டு கொண்டிருந்தேன்.பலரும் எனது அறக்கட்டளைக்கு உதவி செய்தனர் என்று கூறினார்.ஒரு ஆண்டுக்கு இரண்டு படம் பண்ணுவேன். ஆனால் தற்போது ஒரு ஆண்டுக்கு மூன்று படங்கள் பண்ணுகிறேன். நான் இப்போது ஹீரோ ஆகிவிட்டேன்.அதனால் எனக்கு நல்ல பணம் வருகிறது.எனக்குள்ளேயே ஒரு கேள்வி எழுந்தது.`ஹீரோ ஆகிவிட்டாய் உனக்கு நல்லாதான பணம் வருது.ஏன் மத்தவங்களிடம் வாங்கி உதவி பண்ணனும்.நீயே பண்ணலாமே´ என்று கேள்வி எழுந்தது.

இனி அவர்களுக்கு அவரே உதவி செய்ய முடிவு எடுத்துள்ளார்.

இதை நான் ஆணவத்தால் கூறவில்லை என்று கூறினார்.நான் எவ்வளவு கூறினாலும் என்னுடன் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று கூறினார்.உங்களைச் சுற்றி நிறைய பேர் கஷ்டப்படுகிற அறக்கட்டளை இருக்கிறது. அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று கூறினார்.அண்மையில் லாரன்ஸ் அறக்கட்டளைக்கு லைக்கா நிறுவனம் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியது.