சிங்கப்பூரில் விரைவு சாலையில் ஏற்பட்ட விபத்து! கவனக்குறைவால் வண்டி ஓட்டியதாக 26 வயதுடைய லாரி டிரைவர் கைது!!

சிங்கப்பூரில் நவம்பர் 1-ஆம் தேதி (நேற்று) புக்கிட் தீமா விரைவு சாலையில் விபத்து ஒன்று நடந்தது.லாரியும்,மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்து BKE விரைவு சாலையில் உட்லண்ட்ஸ் நோக்கி செல்லும் வழியில் நேர்ந்ததுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு நேற்று (நவம்பர் 1) 6.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக கூறியது. லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் டிரைவர் படுகாயமடைந்தார். லாரி டிரைவரும் காயமடைந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டர் சைக்கிள் டிரைவர், லாரி டிரைவர் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

26 வயதுடைய லாரி டிரைவர் கவனக்குறைவால் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திருக்கக்கூடும் என்று சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்த வீடியோ டிக்டாக்கில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.