சிங்கப்பூர் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து!!

சிங்கப்பூர் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து!!

மே 6 ஆம் தேதி அதிகாலையில், வம்போ ஹவுசிங் போர்டில் உள்ள ஆறாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அதிகாலை 2:30 மணியளவில் பிளாக் 76 லோரோங் லிமாவில் நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததாக தெரிவித்தது.

இந்த தீ விபத்தில் சிக்கி 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே வீட்டில் இருந்த 60 மற்றும் 77 வயதுடைய இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயினால் அனைத்தும் எரிந்து நாசமானது.மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 200 பேர் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்தது.