மலேசியா மன்னர் சிங்கப்பூர் வருகை!! காரணம்??

மலேசியா மன்னர் சிங்கப்பூர் வருகை!! காரணம்??

மலேசியா மன்னரான சுல்தான் இப்ராஹிம் மே-6 ஆம் தேதி(இன்று) சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கோள்கிறார்.

அவர் இன்று முதல் நாளை (மே-7) வரை சிங்கப்பூரில் இருப்பார்.

சிங்கப்பூர் அதிபரான தர்மன் சண்முகரத்தினத்தின் அழைப்பை ஏற்று வருகை புரிகிறார்.

இது அவரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் பொறுப்பேற்றார்.
தனது தந்தையின் 34 ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகு மன்னராக முடி சூட்டப்பட்டது.

சுல்தான் இப்ராஹிம் இரண்டு ஆண்டுக்கு முன் ஜொகூர் ஆட்சியாளராக இருந்தபோது சிங்கப்பூருக்கு வந்தார்.

இஸ்தானாவில் மலேசியா மன்னருக்கும், அவருடைய மனைவிக்கும் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும்.

மலேசியா மன்னர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இருவரையும் சந்திப்பார்.


அவர்கள் மலேசியா மன்னருக்கு அரசு விருந்து வழங்குவார்கள்.