சாமுராய் கத்தியைப் பயன்படுத்தி பாட்டிலை துண்டாக்கிய வீடியோவை பதிவேற்றம் செய்த நபர்…….சில மணி நேரங்களில் கைது……

சிங்கப்பூரைச் சேர்ந்த 49 வயதான ஜோயல் எசேக்கியல் என்ற நபர் பொது இடத்தில் சாமுராய் கத்தியை பயன்படுத்தி பாட்டிலை துண்டாக்கும் வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.

இது தொடர்பாக காவல்துறையிடம் அக்டோபர் 28ஆம் தேதி அன்று புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் சில மணி நேரங்களில் ஜோயலை அடையாளம் கண்டு அவரை கைது செய்தனர்.

அவரது வீட்டை சோதனை செய்ததில் மேலும் பல ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜோயல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்படலாம். முதல் குற்றவாளியாக இருந்தால் குறைந்தது ஆறு பிரம்படிகள் வழங்கப்படலாம்.