மலேசியாவில் கடலில் மாயமான சிங்கப்பூரர்!!

டிசம்பர் 27ஆம் தேதி அன்று மலேசியாவில் Desaru கடற்கரையில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட 49 வயது நபர் காணாமல் போனார்.அவரைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

அவரும், 16 வயதுடைய அவரது மகனும் The Westin Desaru Coast Resort-க்கு அருகில் உள்ள கடலில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இருவரும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 16 வயது மகன் அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றினர்.

அவரை Kota Tinggi மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இச்சம்பவம் குறித்து 12.30 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து 17 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மோசமான வானிலை காரணமாக பொதுமக்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் சிவப்பு கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போனவரின் உடல் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது.