சிங்கப்பூரில் வணிக வளாகத்தில் தீ விபத்து!!

சிங்கப்பூரில் நேற்று(நவம்பர் 29) காலை Sim Lim Square கடை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு காலை 10.55 மணியளவில் தகவல் கிடைத்ததாக கூறியது.

அங்கிருந்து சுமார் 20 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள்.

கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு சமையலறையில் இருந்த பொருட்கள் தீப்பிடித்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை Water sprinkler பயன்படுத்தி அணைத்தனர். அதனை சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.