ஏய்.. இந்தா.. மா… என்ற டயலாக் மூலம் பிரபலமானவர்…..மரணம்….

பிரபல நெடுந்தொடர் எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. இத்தொடர்க்காக டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்து புறப்பட்டு தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

அவர் திரையுலகில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அது மட்டுமல்லாமல் புலிவால்,கண்ணும் கண்ணும் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். அவைகள் பெருமளவில் வெற்றுகளை தேடி தரவில்லை. அதன்பின் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றார். தனக்கென தனி ரசிகர்களையும் பெற்றார்.