சிங்கப்பூரில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள்!

சிங்கப்பூரில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள்!

சிங்கப்பூரில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக வேலை தேடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு ஆண்களுக்கு கிடைப்பது போல் மிக எளிதில் வேலை கிடைப்பது இல்லை. அதற்கான காரணம் என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. 2024 ஆம் வருடம் MOM வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதியில் கொண்டு வந்த கோட்டா மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல கம்பெனிகள் கோட்டா இல்லாத காரணத்தால் பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை.

2. கம்பெனிகள் ஒரு சில வேலைக்கு ஆண்களையே தேர்வு செய்கின்றனர்.

3. சிங்கப்பூரில் வெளிநாட்டு ஆண்களுக்கு அதிகமாக வேலை கிடைப்பதற்கான காரணம் ஆண்கள் மிகவும் கடினமான வேலை செய்வார்கள். வெளிநாட்டு ஊழியர்கள் செய்யும் ஒரு சில வேலையை சிங்கப்பூரார்களால் செய்ய முடியாது.

4. ஆனால் பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும்( ஒரு சில வேலைகளைத் தவிர) சிங்கப்பூரார்களால் செய்ய முடியும்.இருந்த போதிலும் ஒரு சில கம்பெனிகள் பெண்களை வேலைக்கு எடுத்துக் கொண்டுதான் உள்ளார்கள். நீங்கள் சரியான ஏஜெண்டை அணுகி நல்ல முறையில் சம்பளம் மற்றும் ஏஜென்டின் கமிஷன் தொகையை பேசி நல்லபடியாக சிங்கப்பூர் செல்லலாம். ஆனால் நீங்கள் விசா வருவதற்கு முன் பணம் எதுவும் கட்டி ஏமாற வேண்டாம்.

5. நீங்கள் சிங்கப்பூரில் வேலைக்கு செல்வதற்கு முன் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
6. சிங்கப்பூரில் தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கு வீட்டு வேலை அதிகமாகவும் எளிதாகவும் கிடைக்கிறது. ஆனால் இதில் சம்பளம் மிகவும் குறைவு.