Singapore Breaking News in Tamil

வீட்டு வேலைக்கு சேர்த்தது ஒரு குத்தமாயா?சுமார்ட் வேலைக்காரி!

மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மு பெல், தனது முதலாளியின் வீட்டில் பொருட்களைத் திருடியதற்காக வியாழக்கிழமை (ஜூன் 15) இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

டிசம்பர் 14, 2022-ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக வேலையில் சேர்ந்தார்.

குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரின் பராமரிப்பாளராகவும், சமையல் மற்றும் துவைக்கும் பணியிலும் இருந்தார்.

தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 18 மணி நேரம் வேலை செய்தார். பெல்க்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் விடுமுறையுடன் மாதத்திற்கு S$600 வழங்கப்பட்டது.

சுமார் நான்கு மாதங்கள் அங்கேயே வேலை பார்த்துவிட்டு விரக்தியில் வீட்டை விட்டு ஓட முடிவு செய்துள்ளார்.

இந்த ஆண்டு ஏப்., 17ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தப்பி ஓட மு பெல் முடிவு செய்துள்ளார்.

தன் அடையாளத்தை மறைக்க அவள் ஒரு அறையிலிருந்து நைக் தொப்பியைத் திருடினார்.

ஹாலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இருந்து 3 மைக்ரோ எஸ்டி கார்டுகளையும் திருடியுள்ளார், அதனால் அவரை அடையாளம் காண முடியாது என்று நினைத்து திருடி உள்ளார்.

சுமார் ஒரு வாரம் கழித்து, ஏப்ரல் 26 அன்று, இரவு வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள திறந்தவெளி கழிப்பறை ஜன்னல் வழியாக ஏறி, ஒரு பெட்டகத்தைத் திருட முயற்சி செய்துள்ளார்.

அதோடு அங்கே இருந்த ஒரு உண்டியலில் இருந்து பல நாணயங்களை உடைத்து எடுத்திருக்கிறார்.

ஒலிம்பஸ் கேமரா மற்றும் ஜி ஷாக் வாட்சையும் திருடியிருக்கிறார்.

யாரோ கதவைத் திறக்க முயற்சிப்பதை கேட்டவுடன் ஜன்னல் வழியாக ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

மு பெல் அதே இரவில் அருகிலுள்ள பூங்காவில் கைது செய்யப்பட்டார், 50 வயதான முதலாளி காவல்துறையிடம் இச்சம்பவம் குறித்து புகாரளித்தார்.

அவர் உணவு மற்றும் பானங்களுக்கு செலவழித்த நாணயங்களைத் தவிர, திருடப்பட்ட பொருட்களை பெல்லிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

பெல் தனது குற்றங்களைப் ஒப்புக் கொண்டார்.

பணி புரிந்த வீட்டில் திருடிய குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.