சிங்கப்பூரில் பணத்தை இழந்த பணிப்பெண்கள்!!

சிங்கப்பூரில் பணத்தை இழந்த பணிப்பெண்கள்!!

சிங்கப்பூரில் பணி புரியும் பணிப்பெண்கள் 500 பேர் கடந்த 2023 ஆம் ஆண்டில் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் மோசடிக்காரர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் 423 -ஆக இருந்த நிலையில்,
2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் 18 விழுக்காடு அதிகம் என்று சட்ட உள்துறை அமைச்சர் கா. சண்முகம் ஏப்ரம் 2 தேதி அன்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு சிலர் புகார் அளிக்காமல் இருக்கக் கூடும் என்று அரசு சார்பட்டா அமைப்புகள் தெரிவித்துள்ளது.மேலும்
2023 ஆம் ஆண்டில் மட்டுமே மோசடிக்காரர்களிடம் பணிபெண்கள் குறைந்தது $800,000 இழந்ததாக காவல்துறை கூறியது.

2023 ஆம் ஆண்டு பொய் விளம்பரம், வேலை மோசடி, மின் வர்த்தக மோசடி, இசை நிகழ்ச்சி தொடர்பான நுழைவுச்சீட்டு விற்பனை மோசடி போன்ற பல மோசடிகளின் மூலம் பணிப்பெண்கள் தங்களின் பணத்தை இழந்து உள்ளனர்.

இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள பணிப்பெண்களுக்கு காவல்துறையினர் சிறப்பு திட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இதன் மூலம் காவல்துறையினர் மோசடி குற்றங்களில் இருந்து எப்படி தப்பிப்பது என்று பணிப்பெண்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

மோசடியால் பாதிக்கப்பட்ட பணி பெண்கள் மற்றும் மோசடியில் இருந்து தப்பித்த கிட்டத்தட்ட 2000 பணிப்பெண்கள் மற்ற பணிப்பெண்களுக்கு மோசடி குற்றங்கள் எப்படி தவிர்ப்பது என்று மாதம் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களது அனுபவத்தை பகிர்கின்றனர்.

லக்கி பிளாசா கடை தொகுதி பாய லேபர் வட்டாரம் என பணிப்பெண்கள் தங்கள் விடுப்பு நாட்களில் அதிகம் கூடும் இடங்களில் இந்த விழிப்புணர்வு திட்டத்தை பணிப்பெண்கள் அடங்கிய தொண்டு ஊழியர் குழு நடத்தி வருகிறது.

Follow us on : click here 👇👇

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg