சிசிலியில் விஷ வாயு தாக்கி 5 ஊழியர்கள் பலி!!

சிசிலியில் விஷ வாயு தாக்கி 5 ஊழியர்கள் பலி!!

சிசிலியில் ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்தது. அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது ஐந்து பராமரிப்பு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்கள் ஹைட்ரஜன் சல்பைடு என்ற விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Casteldaccia மேயர் Giovanni di Giacinto, இந்த சம்பவத்தை உறுதிசெய்தார். பணியிட பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் வேலையிடத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் மேம்படுத்தவும், வேலையிடத்தில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கான விவாதங்களையும் எழுப்புவதாக தெரிவிக்கப்பட்டது.