ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூர் ஃபென்சர் வீராங்கனை தகுதி பெற்றார்!!

ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூர் ஃபென்சர் வீராங்கனை தகுதி பெற்றார்!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூரின் வார்ட் போர் வீராங்கனை கிரியா டிகானா தகுதி பெற்றுள்ளார். இவருடைய வயது 23 . ஏப்ரல் 28-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தகுதி சுற்று நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தானிஹா காத்திரியை எதிர்த்து களம் இறங்கினார். 15-13 எனும் ஆட்ட கணக்கில் இந்தியாவின் தானிஹா காத்திரியை தோற்கடித்து வெற்றி வாகையை சூடினார்.

உலக தரவரிசை பட்டியலில் இவர் 64-வது இடத்தை பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்ற இரண்டாவது சிங்கப்பூரர் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 மார்ச் மாதம் வார் போர் வீராங்கனை அமிதா பெத்தியர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியடைந்தார்
.

மீண்டும் ஒலிம்பிக்கில் போட்டியிட போவது மிகவும் உற்சாகமாக இருப்பதாக கிரியா கூறினார்.