சுற்றுலாவுக்கு சென்ற பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

சுற்றுலாவுக்கு சென்ற பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில், 13 குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் ஜனவரி 18ஆம் தேதி அன்று வடோதரா நகருக்கு அருகில் உள்ள ஒரு ஏரியில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் சுற்றுலாவுக்குச் சென்றிருந்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது.

உயிர்பிழைத்தவர்களை தேடும் பணியில் டஜன் கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக நபர்களை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.