Latest Singapore News

காற்றோடு கலந்த வினோத் குமார்!விபத்து நடந்தன்று என்ன செய்து கொண்டிருந்தார்?

கடந்த ஜூன் 15-ஆம் தேதி யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத நாள்.

பல கனவுகளுடன் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த வினோத் குமார். அவருடைய கனவுகள் அவரோடு காற்றில் கலந்த நாள்.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி தஞ்சோங் பகாரில் கட்டிட விபத்து ஏற்பட்டது.இச்சம்பவத்தில் வினோத்குமார் என்ற 20 வயது இளைஞர் காணாமல் போனார். அவர் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

அவர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருந்தது மாலை 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு அவரின் உடல் கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டது.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து நடந்த அன்று வினோத் குமார் வேலை நடக்கும் இடத்திற்கு வெளியே நடந்து கொண்டிருந்ததாக வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் தெரிவித்துள்ளது.