56 வயதுடைய நபரைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாக 37 வயதுடைய பெண் மீது குற்றச்சாட்டு!! மரண தண்டனை விதிக்கப்படுமா?

56 வயதுடைய நபரைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாக 37 வயதுடைய பெண் மீது குற்றச்சாட்டு!! மரண தண்டனை விதிக்கப்படுமா?

பீச் ரோட்டில் ஒரு குடியிருப்பில் 56 வயது ஆடவர் ஒருவரைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 37 வயது பெண் ஒருவர் மே 9ஆம் தேதி (இன்று) குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

மே 8 ஆம் தேதி அதிகாலையில் காவல்துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் வந்ததாக தெரிவித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்தன. வீட்டில் அந்த நபர் மயக்க நிலையில் கிடைப்பதைக் கண்டனர்.அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த நபரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக 37 வயதுடைய பெண்ணை காவல்துறை சம்பவ இடத்திலேயே கைது செய்தது.

அந்த பெண் இறந்த நபரின் காதலி என்று நம்பப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமாக கருதப்படும் கத்தியை காவல்துறை கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை ஒரு கடுமையான குற்றம் மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த பெண் மரண தண்டனையை சந்திக்க நேரிடும்.