வெளுத்து வாங்கிய கனமழையால் புதைந்த வீடு!! சேற்றில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்!!

வெளுத்து வாங்கிய கனமழையால் புதைந்த வீடு!! சேற்றில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்!!

ஜனவரி 18ஆம் தேதி அன்று தெற்கு பிலிப்பைன்சில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

சேற்றில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நான்கு பேரை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாக அவர்கள் கூறினர்.

மிகவும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் பள்ளிகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.