மீண்டும் மீண்டும் நடக்கும் துயர சம்பவம்!!

மீண்டும் மீண்டும் நடக்கும் துயர சம்பவம்!!

கிரேக்க தீவு சமோஸ் அருகே புலம்பெயர்ந்தோர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 25 பேர் மீட்கப்பட்டனர்.

நான்கு புலம்பெயர்ந்தோர்கள் இன்னும் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், கிரேக்க அதிகாரிகள் சியோஸ் தீவு அருகே புலம்பெயர்ந்தோர்களை ஏற்றிச் சென்ற வேகப் படகை கண்டறிந்தனர்.

அந்த படகில் இரண்டு குழந்தைகள் உட்பட 20 புலம்பெயர்ந்தவர்களை  கண்டுபிடித்தனர்.