குழந்தை குறித்த கேள்விக்கு சாந்தனு-கீர்த்தி தம்பதியின் சுளீர் பதில்..!!!

குழந்தை குறித்த கேள்விக்கு சாந்தனு-கீர்த்தி தம்பதியின் சுளீர் பதில்..!!!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகனான சாந்தனு முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் “வேட்டிய மடிச்சு கட்டு” படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் சக்கக்கட்டி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் அடுத்தடுத்த படங்களில் நடித்த போதிலும், சாந்தனு சினிமாவில் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற முடியவில்லை.

அவர் பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை 2015 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி சொந்தமாக இரண்டு நடனப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவர்கள் யூடியூப்பில் வித் லவ் சாந்தனு கிகி என்ற பெயரில் வீடியோக்களை வெளியிடுகிறார்கள்.

அவர்களில் சிலர் ஏன் 10 வருடங்களாக குழந்தை பிறக்கவில்லை என்று கேட்டதாகத் தெரிகிறது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, சாந்தனு கீர்த்தி தம்பதியினர் எப்போது குழந்தை பிறக்கும் என்று எங்களிடம் கேட்கிறார்கள்.

நீங்க எங்க குழந்தைகளைப் பார்த்துக்கப் போறீங்களா? நாங்க குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். கேக்குறவங்க குழந்தைய பாத்துக்க மாட்டாங்க..? நாங்க தான் பாத்துக்கணும்..நாங்க இதை திமிராகவோ ஆணவமா பேசுறோம்னு நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

நாங்கள் எங்கள் வலியையும் துன்பத்தையும் தான் இப்படி வெளிப்படுத்துகிறோம். மேலும் பலர் தொடர்ந்து குழந்தை தொடர்பான விஷயங்களை கேட்டுக்கொண்டே இருப்பதால் எங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.கடவுள் எப்பொழுது எங்களுக்கு குழந்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது கொடுக்கட்டும் என்று பதிலளித்தார்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan