ஏனெனில் ஹஜ் பெருநாளுக்காக ஒதுக்கி வைக்கப்படும் செம்மறி ஆடுகளில் ஏதேனும் இறந்தாலோ கை கால்களில் ஊனமுற்றாலோ அவை மாற்றுவதற்கு இந்த செம்மறி ஆடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாண்டும் அத்தகைய 15 செம்மறி ஆடுகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரியா ரிஸ்க் ஹோல்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் முகமது நூர் அர்ஷப் அபு பாக்கா தெரிவித்தார்.
மேலும் பயன்படுத்தப்படாத செம்மறி ஆடுகள் நன்கொடையாக அளிக்கப்படும் என்று கூறினார்.
கிளமெண்டி ரோட்டில் உள்ள ராயல் ஆமி பள்ளிவாசலில் 150 செம்மறி ஆடுகள் விநியோகம் செய்யப்பட்டன.
மேலும் ஓமர் சல்மா பள்ளிவாசல்,பெர்டாவுஸ் பள்ளிவாசல் செம்பவாங்கில் உள்ள மாலே செட்டில்மெண்ட் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசலுக்கு செம்மறி ஆடுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.