வாசலீன்,பெட்ரோலியம் ஜெல்லியில் இவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளதா...???
வாசலீன் பல ஆண்டுகளாக அழகுசாதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் போன்று வழவழப்பாக இருக்கும் இந்த பொருள் வறண்ட மற்றும் எண்ணெய் பசை உள்ள இரண்டு சருமத்தினருக்கும் ஏற்றவை. இது சரும அழகிற்கு மட்டுமின்றி கூந்தல் பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
வாசலீன் உபயோகித்தால் ஏற்படும் நன்மைகள்:
👉இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கிறது.
👉இது சொரியாசிஸ் போன்ற சருமப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
👉உடலில் ஏற்படும் வெட்டுக்கள் மற்றும் காயங்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும்.
👉இது நம் உதடுகள் வறண்டு போவதையும் வெடிப்பதையும் தடுக்கிறது.
👉பச்சை குத்தியிருந்தால், வாசலீனை தடவுவதன் மூலம் வலிகள் குறையும்.
👉சிலருக்கு அரிப்பு ஏற்படும் போது வறட்சியால் தோல் உரிந்து விடும்.வாசலீன் இந்தப் பிரச்சினையை சரி செய்கிறது.
👉இது மற்ற ஒப்பனைப் பொருட்களுடன் கலந்து உபயோகிக்கும் போது சருமத்திற்கு மேலும் பளபளப்பைத் தருகிறது.
👉உங்கள் உடலில் வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு இதைப் பூசி, பின்னர் திரவத்தைத் தெளிக்கலாம்.இதனால் நீண்ட நேரத்திற்கு வாசம் அப்படியே இருக்கும்.
வாசலீனுக்கும் பெட்ரோலியம் ஜெல்லிக்கும் என்ன வித்தியாசம்?
வாசலீன் என்பது நல்ல பெட்ரோலியம் ஜெல்லியுடன் cmicrocrystalline மெழுகு சேர்த்து தயாரிக்கப்படுகிறது.ஆனால் பெட்ரோலியம் ஜெல்லி இயற்கை பெட்ரோலியம் மற்றும் ஹைட்ரோகார்பன்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வாசலீன் ஒரு இனிமையான வாசனையைக் கொண்டுள்ளது. ஆனால் பெட்ரோலியம் ஜெல்லியில் ஒரு எண்ணெய் வாசம் இருக்கும்.