கேரளப் பெண்களின் அழகிற்கு இதுதான் காரணமா...??

தேங்காய் எண்ணெயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.மேலும் இது இயற்கை அழகு சார்ந்த பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கேரள பெண்களின் மிருதுவான பளபளப்பான சருமத்திற்கு இந்த தேங்காய் எண்ணெயும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.ஆம்.தினமும் குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணையை முகத்தில் தடவி ஊற வைத்த பின் குளிப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெயையே பயன்படுத்துகிறார்கள்.
தேங்காய் எண்ணெயில் இயற்கையிலேயே 90% நிறைவுற்ற கொழுப்பைக் கொண்டிருப்பதால் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இது முடி பராமரிப்பு முதல் இயற்கை சரும பராமரிப்பு மற்றும் சமையல் வரை பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் நீரை முகத்தில் 6 மாதங்கள் தொடர்ந்து தடவினால், சின்னம்மையால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
வழுக்கை தேங்காயை நன்றாக அரைத்து, சிறிது தண்ணீரில் கலந்து, முகத்தில் கீழிருந்து மேல் வரை தடவி, காய்ந்ததும், தண்ணீரில் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் இருக்கும். கரும்புள்ளிகள் இருந்தால், அவை விரைவில் மறைந்துவிடும்.
வெயில் காலத்தில் சூரிய ஒளி படுவதால் முகம் கருமையாக மாறுவது சகஜம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கூட பலர் இந்த நிலையை அனுபவிக்கிறார்கள்.தேங்காய் முகம் கருமையாவதைத் தடுக்க உதவுகிறது.
தேங்காய்ப் பால் மற்றும் கடலை மாவு கலந்து பேஸ்ட் செய்யவும்.இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, அது காய்ந்ததும் தண்ணீரில் கழுவவும்.
இப்படி வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்தால் முகம் பளபளப்பாகும்.
தேங்காய் எண்ணெய் சருமத்தைப் பாதுகாப்பதில் சிறந்தது.இதில் உள்ள கொழுப்புச் சத்து சரும சுருக்கங்களைக் குறைக்கிறது. இது சருமத்திற்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. தேங்காய் எண்ணெய் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான மலிவான மற்றும் பாதுகாப்பான மூலப்பொருளாகும்.
உங்கள் தலைமுடியில் ரசாயனம் சார்ந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேங்காய் எண்ணெயைத் தேய்ப்பது நல்லது. இது தலைமுடி வறண்டு போகாமல் பாதுகாக்கும்.மேலும், குளிப்பதற்கு முன், தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவி ஊற வைக்கலாம்.
முடியைப் பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெயை விட வேறு எதுவும் இல்லை. சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதம் நிறைந்துள்ளது. வாரத்திற்கு ஒரு முறை இந்த எண்ணெயில் தலையை ஊறவைப்பதன் மூலம், முடி வேர்கள் வலுவடைந்து, பொடுகுத் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சரும பூஞ்சை தொற்றுகளைக் கட்டுப்படுத்துகின்றன. இது உடலை மட்டுமல்ல, குடலையும் பாதுகாக்கிறது. இது செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan