சிங்கப்பூரில் இருந்து கொண்டே Europe நாட்டுக்கு வேலைக்கு செல்ல வேண்டுமா?

சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்தியர்கள் Europe நாட்டுக்கு செல்ல சிங்கப்பூரில் இருந்து கொண்டே இன்டர்வியூவில் கலந்து கொண்டு செல்ல முடியும். அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாக பலரும் சிங்கப்பூர் செல்வது சிங்கப்பூரில் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதாலும் மிகவும் பாதுகாப்பான நாடு என்பதாலும் தான். ஆனால் இதைவிட சற்று அதிகமான சம்பளம் கிடைக்கும். அதுவும் சிங்கப்பூரிலிருந்து முயற்சி செய்யலாம் என்றால் பலரும் ஆவலாக தான் காத்திருக்கிறார்கள். ஆனால் அது எப்படி என்று பலருக்கும் தெரிவதில்லை.
சிங்கப்பூரை விட யூரோப் நாடுகளில் சம்பளம் சற்று அதிகமாகவே கிடைக்கிறது. அதுவும் நாம் சிங்கப்பூரில் சம்பாதித்துக் கொண்டே முயற்சி செய்ய முடியும் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்.
இதற்கு யாரெல்லாம் முயற்சி செய்யலாம் :
இந்திய குடிமகன்கள் , சிங்கப்பூரில் முறையான வேலை அனுமதி அட்டை வைத்து வேலை செய்பவர்கள் அனைவருமே இதற்கும் முயற்சி செய்யலாம்.
சம்பளம் எவ்வளவு கிடைக்கும் :
நீங்கள் டிரைவராக சென்றால் 1800 யூரோ (இந்திய ரூபாய் மதிப்புப்படி 175000 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்.
மற்ற வேலைக்கு சென்றால் 1000 யூரோ ( இந்திய ரூபாய் மதிப்புப்படி 95000 ஆயிரத்துக்கு மேல் )முதல் 1200 யூரோ ( இந்தியா ரூபாய் மதிப்புப்படி 117000 கஆயிரத்துக்கு மேல்) வரை சம்பாதிக்கலாம்.
இதற்கு என்னென்ன டாக்குமெண்ட்கள் தேவைப்படும் :
படிப்பு சம்மந்தப்பட்ட அனைத்து சர்டிபிகேட்களும் மற்றும் ஒரிஜினல் பாஸ்போர்டும் தேவைப்படும்.
விசா வருவதற்கான கால அவகாசம் எத்தனை நாட்கள் :
நீங்கள் அனைத்து டாக்குமெண்ட்களையும் சரியான முறையில் கொடுத்தால் உங்களுக்கு 30 லிருந்து 40 நாட்களுக்குள் விசா வந்துவிடும் சில சமயங்களில் சற்று அதிக நாட்களும் ஆகலாம்.
இந்த வேலைக்கு எங்க முயற்சி செய்வது :
சிங்கப்பூரில் அரசு அனுமதியுடன் ஏஜென்சிகள் யூரோப் நாடுகளுக்கு அப்ளை செய்வதற்காக இயங்கி வருகிறது. அவர்களிடம் முறையாக சென்று உங்களுடைய டாக்குமெண்டுகளை கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு வேலை வாங்கி தருவார்கள்.
இதற்கு எவ்வளவு செலவாகும் :
வெளிநாடு செல்வதற்கு பெரும்பாலும் பணம் தான் பல பேருக்கு பிரச்சனையாக உள்ளது . ஆனால் நீங்கள் சிங்கப்பூரில் சம்பாதிப்பதால் அது உங்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது . நீங்கள் europe நாட்டிற்கு செல்வதற்கு உங்கள் வேலையை பொறுத்து ஏஜென்டின் தொகை நிர்ணயிக்கப்படும். சிங்கப்பூர் டாலரின்படி 4000 முதல் 6000 டாலர் வரை ஏஜென்ட் கமிஷனாக நிர்ணயிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இதில் இருக்கும் சிக்கல்கள் :
1. பெரும்பாலும் சிங்கப்பூரில் கம்பெனிகள் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால் europe நாட்டிற்கு செல்வதற்கு ஒரிஜினல் பாஸ்போர்ட் தேவை . இதனால் உங்களால் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை கொடுத்து வேலை வாங்க முடியாது.
2. Europe நாட்டில் சட்டங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு கொண்டே இருக்கும் . இதனால் உங்களுக்கு விசா வருவதற்கு காலதாமதம் ஆகலாம்.
3. அந்த நாட்டின் காலநிலை சிங்கப்பூர் போல் இருக்காது. அதனால் நம் நாட்டவருக்கு அங்கு வாழ்வது சற்று கடினம்.
4. சிங்கப்பூர் போன்று நமது இந்திய உணவுகள் அங்கு கிடைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.
5. அங்கு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பி வந்து விடுகின்றனர் . இதனால் நீங்கள் அங்கு செல்ல வேண்டுமென்றால் நன்கு யோசித்து முயற்சி செய்யவும்.
இது போன்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு தகவலுக்கு நமது SGTAMILAN இணைய பக்கத்தில் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் , டெலிகிராம் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan