கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!!
கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து தகவலைப் பகிர்ந்து கொண்டிருப்பதாக சீனா கூறியுள்ளது.
கோவிட் -19 பரவல் குறித்த தகவல்களை வெளியிடுவதில் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்திய நிலையில் பெய்ச்சிங் அதை தெரிவித்தது.
வைரஸின் மரபணுத் தொடர்,நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் உலகளாவிய ஒத்துழைப்பை முன்கூட்டியே பகிர்ந்து கொள்வதை சீனா சுட்டிக்காட்டியது.