சிங்கப்பூரில் திருட முயன்ற 69 வயது நபர் என்ன திருடினார் என்று தெரியுமா!!

சிங்கப்பூரில் திருட முயன்ற 69 வயது நபர் என்ன திருடினார் என்று தெரியுமா!!

காரிஸ் பின் கஸ்மண்ட் என்பவர் இரண்டு தரை வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து கைவரிசை காட்ட முயன்றார்.

அவருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஏற்கனவே இரண்டு ஜோடி செருப்புகளை திருடினார்.

அவர் நீதிபதியிடம் தமக்கு கடுமையான தண்டனை விதிக்கும்படி கேட்டார்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது திருட்டு உள்பட ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அவருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

காவல்துறையின் விசாரணையில் அவர் ரொக்கமும் நகையும் திருடுவதற்காக தரை வீட்டிற்குள் புகுந்தது அம்பலமானது.

இதேபோல 2010 ஆம் ஆண்டு செய்த குற்றத்திற்காக இவர் 14 ஆண்டுகள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஜாலான் பாத்து பேட்டையில் இருந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்கு காரிஸ் பேருந்தில் சென்றுள்ளார்.

அங்கிருந்து ஆயர் ராஜா பெரு விரைவு சாலையை நோக்கி நடந்த கரிஸ் அங்குள்ள சில கால்வாய்களில் இறங்கியதன் வழியாக சேண்ட்விச் சாலையில் உள்ள தரைவீடு பகுதியில் நுழைந்து திருட முயற்சித்துள்ளார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan