அமெரிக்க நீதிமன்றத்தின் அறிவிப்பால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

அமெரிக்க நீதிமன்றத்தின் அறிவிப்பால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி...!!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை ஏற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் விதித்த தடையை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்களை ஏற்றுக்கொள்ள பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியை நீட்டிப்பதாக நீதிபதி கூறினார்.

இந்த அறிவிப்பால் பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகமாகும்.

அரசாங்கம் அதற்கு நிதியளிப்பதை நிறுத்தும் என்று ஜனாதிபதி டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.

மேலும் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்குகளும் நீக்கப்படும் என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தில் நடக்கும் இனப் பாகுபாடு குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக திரு.டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.

மாணவர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு மாணவர்கள் என்பதால், திரு.டிரம்பின் தடை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan