மேலும் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்குகளும் நீக்கப்படும் என்று கூறினார்.
பல்கலைக்கழகத்தில் நடக்கும் இனப் பாகுபாடு குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக திரு.டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.
மாணவர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு மாணவர்கள் என்பதால், திரு.டிரம்பின் தடை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியது.