2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர் $20.6 பில்லியன் மதிப்புள்ள பொருள் சேவை வரியை வசூலித்தது.
2030ஆம் ஆண்டு வரை பொருள் சேவை வரியை மேலும் உயர்த்தும் தேவையில்லை என்று பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பொருள் சேவை வரியைத் தவிர்த்து, புகையிலைக்காக $1.1 பில்லியன் வரி, மதுபானத்துக்காக $775.9 மில்லியன் வரியை 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுங்கத்துறை வசூலித்தது.
புகையிலை, மதுபானம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் சிங்கப்பூர் சுங்கத்துறை கூறியது.
புகையிலை தொடர்பான குற்றச் செயல்கள் 2024ஆம் ஆண்டில் சுமார் 40 சதவீதம் அதிகரித்தது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 2024ஆம் ஆண்டில் மதுபானம் தொடர்பான குற்றச் செயல்கள் 80 சதவீதத்துக்கும் மேல் கூடியுள்ளது .
2024ஆம் ஆண்டில் பொருள் சேவை வரி தொடர்பான குற்றங்கள் சற்று உயர்ந்தன.