பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இந்திய விமானங்கள் மற்றும் விமானத்துறை!!
இந்தியாவின் விமானத்துறை பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு தணிக்கை செய்த விமானங்களிலும் விமான நிலையங்களிலும் பல்வேறு கோளாறுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஏர் இந்தியாவின் AI171 விமானம் விழுந்து நொறுங்கியதை அடுத்து அந்த தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சரியான கண்காணிப்பு மற்றும் பழுது பார்க்கும் நடவடிக்கைகளும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை காட்டும் வகையில் சில பழுதுகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதை அமைப்பு கண்டறிந்தது.
புதுடில்லி மும்பை விமான நிலையங்களில் பழுதடைந்த தள்ளுவண்டிகள் போன்ற பயன்படுத்த முடியாத கருவிகள் போன்றவற்றை சிவில் விமானத்துறை தலைமை இயக்குனர் குழு நடத்திய சோதனையில் தெரியவந்தது.
இது போன்ற பல கருவிகள் பழுதடைந்து இருப்பதும், அதை சரி செய்யாமல் இருப்பதும் தெரியவந்தது.
சோதனையின் போது கண்டறியப்பட்ட அனைத்து குறைபாடுகளும் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரியப்படுத்தப்பட்டன. அடுத்த ஏழு நாட்களுக்குள் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய விமான துறையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு விமான நிலையங்கள் செயல்படவில்லை என்ற அறிக்கை கூறியது.
விமானத்தின் பொறியாளர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையில் மிகவும் அலட்சியமாக இருப்பதாகவும்,விமானங்களில் உள்ள பழுதுகளை அவர்கள் பதிவேட்டில் சரிவர பதிவு செய்யாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேய்ந்து போன சக்கரங்களைக் கொண்டிருந்த உள்நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டிலிருந்து நிறுத்தப்பட்டது.