சிங்கப்பூரின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் ஆட்குறைப்பு..!!!

சிங்கப்பூரின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் ஆட்குறைப்பு..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி சமீபத்தில் 80 ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்தது.

மேலும் நிறுவனம் அதன் தொடர்புடைய பதவிகளை இந்தியாவிற்கு மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 80 ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்தனர்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு போன்ற பிரதான நிதி நிறுவனங்கள் செயல் திறனை மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும், தொழில்நுட்பம் மூலம் கணினி மயமாக்கும் திட்டத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும் back-office சேவை மையங்கள் (Bangalore / Chennai) இதற்கு உதவியாக மாற்றப்பட்டுள்ளன.மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் soft-skills retraining மற்றும் புதிய நிறுவன வளர்ச்சிக்கு இது சில பணியிடங்களை வழங்கும் வாய்ப்பாகும்.

வங்கியின் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத் துறைகளில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை தொழில் வலைத்தளமான efinancialcareers தெரிவித்துள்ளது.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி கடந்த ஆண்டு நவம்பரில் சிங்கப்பூர், லண்டன், இங்கிலாந்து மற்றும் ஹாங்காங்கில் சுமார் 100 நடுத்தர அளவிலான வேலைகளை குறைத்திருந்தது.

80 வேலைகளை இந்தியாவிற்கு மாற்றுவதற்கான முடிவு வெறும் தொடக்கமாக இருக்கலாம் என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வட்டாரம் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வங்கியின் உலகளாவிய வணிகம், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுக் குழுக்களுக்கு சிங்கப்பூர் ஒரு முக்கிய மையமாக உள்ளது என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan