ஊட்ரம் பார்க் MRT நிலையத்தின் மின்படியில் சிறுநீர் கழித்த நபர் கைது..!!! 13/01/2025 / #Sgtamilan, #Singapore, #Singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஊட்ரம் பார்க் MRT நிலையத்தின் மின்படியில் சிறுநீர் கழித்த நபர் கைது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஊட்ரம் பார்க் MRT நிலையத்தில் உள்ள மின்படியில் சிறுநீர் கழித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) மாலை நடந்துள்ளது.இது குறித்து நெட்டிசன் ஒருவர் Complaint singapore facebook என்ற பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் SMRT மற்றும் SBS Transit உடன் இணைந்து நடவடிக்கை எடுத்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தில் லைன் 3ல் உள்ள மின்படியின் கைப்பிடியில் ஒருவர் சிறுநீர் கழிப்பதை அவரது நண்பர் பார்த்ததாக நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! ஒருவர் அந்த நபரை அணுகியதும், அவர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.இச்சம்பவம் தொடர்பாக 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொது இடங்களில் அசுத்தம் செய்யும் இவரின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!