உயிரிழந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்திய நகக் கலைஞர்…!!

உயிரிழந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகு படுத்திய நகக் கலைஞர்...!!

பேங்காக்கைச் சேர்ந்த ஒரு நகக் கலைஞர் இறந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்தியுள்ளார்.

அவர் இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அழகு நிலையத்திற்குச் செல்லவிருந்த நாளில், வாடிக்கையாளர் ஒரு விபத்தில் இறந்தார்.

வாடிக்கையாளரின் தோழி நகக் கலைஞரைச் சந்தித்து, இறுதிச் சடங்கில் அவரது நகங்களை அழகு படுத்தச் சொன்னார்.

அந்த வாடிக்கையாளரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று தனது தோழி கேட்டுக் கொண்டதாக நகப் பராமரிப்புக் கலைஞர்  தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையைக் கேட்டதும் அவர் திகிலடைந்தார்.

எனவே அவரது நகங்களை அழகு படுத்துவதற்குப் பதிலாக, செயற்கை நகங்களை உருவாக்கி உண்மையான நகங்களின் மேல் ஒட்டி வைக்கக் கொடுத்தார்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவியது.
இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இம்மாதிரியான செயல்களுக்கு சிலர் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இறந்தவரின் தாயார் இதுபோன்ற கருத்துக்களைக் கண்டித்தார்.

தனது மகளின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்று அவர் கூறினார்.