வாக்காளர்கள் மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் வோங் அறிவுரை..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் பிரதமர் லாரன்ஸ் வோங் தெம்பனிஸ் குடியிருப்பாளர்களைச் சந்தித்து உரையாடினார்.
அவருடன் மாசெக் தெம்பனிஸ் குழுத் தொகுதி மற்றும் தெம்பனிஸ் சங்க தனித் தொகுதி வேட்பாளர்களும் சென்றிருந்தனர்.
பிரதமர் லாரன்ஸ் வோங், வாக்காளர்களிடம் மூன்று அம்சங்களைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை ‘தெம்பனிஸ் கிரீன்கார்டு’ வளாகத்தில் குடியிருப்பாளர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
“முதலில், இந்தத் தேர்தல் உங்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றியது. வியக்கத்தகு முறையில் மாறிவிட்ட உலகில் நாம் வளர்ந்து வரும் பெரும் சவால்களை எதிர்கொள்கிறோம்,” என்று பிரதமர் வோங் கூறினார்.
இரண்டாவதாக, இந்தப் பொதுத் தேர்தல் சரியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றியது என்றார்.
“அதாவது, நேர்மையான, நம்பகமான, நல்ல குணமுள்ள மக்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்கள் தங்கள் தொகுதிகளிலும் நாடாளுமன்றத்திலும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்” என்று பிரதமர் கூறினார்.
“மூன்றாவதாக, இந்தப் பொதுத் தேர்தல் நமது கொள்கைகளைப் பற்றியது. நாம் நமக்காக உருவாக்க விரும்பும் சமூகத்தைப் பற்றியது. குறிப்பாக, பல இன மற்றும் பல மத நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பது தொடர்பானது,” என்று கூறினார்.
மேலும் அவரது உரையில், பல்லாண்டுகளாக இங்குப் பணியாற்றிய மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உழைப்பால்தான் இன்று தெம்பனிஸ் துடிப்பான வட்டாரமாக, கிழக்குப் பகுதியின் மையமாகத் திகழ்வதாகக் கூறினார்.
தெம்பனிஸ் தொகுதியில் உலா வரும்போது ‘ரூஃபஸ்’ என்ற நாய் மசேகா சின்னத்தை அணிந்திருப்பதைக் கண்டு பிரதமர் வோங் மகிழ்ச்சியடைந்தார்.
தெம்பனிஸ் வட்டார குடியிருப்பாளர்கள் பலர் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.