சைக்கிள் மீது மோதிய காவல்துறை வாகனம்!! 07/06/2025 / sgtamilan, singapore, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சைக்கிள் மீது மோதிய காவல்துறை வாகனம்!! கெப்பல் ரோடு வழியாக மரினா கரையோர விரைவுச்சாலைக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.சைக்கிளும் காவல்துறை வாகனமும் மோதிக்கொண்டன.41 வயதுடைய சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 30 வயதுடைய அந்த காவல்துறை அதிகாரி சைக்கிளோட்டி மீது மோதிய பின்னர் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது.இது குறித்து அவரிடம் விசாரித்த போது இவ்வாறு நடந்தது அவருக்கு தெரியாது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இனிமேல் TEP Pass இல் செல்ல முடியாதா? உண்மையான நிலவரம் என்ன? போக்குவரத்து காவல்துறை அவரை அழைத்து நடந்ததைப் பற்றி தெரிவித்திருந்தது.அதனை அறிந்தவுடன் அந்த காவல்துறை அதிகாரி அங்கு சென்றிருக்கிறார்.விசாரணைக்கு அவர் உதவி வருகிறார்.மேலும் வாகனம் ஓட்டுவதிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு !!