சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா...!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக ரோஹித் சர்மா (வயது 38) உள்ளார். அவர் இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 273 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்.நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
இந்த தொடருக்கு ரோஹித் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ரோஹித்தை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முன்வரவில்லை.
இதன் காரணமாக, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதாக செய்திகள் வந்தன. 38 வயதான அவரை டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற பிசிசிஐ அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் ரோஹித் சர்மா மீது பிசிசிஐ எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்றும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ரோஹித் சர்மாவின் முடிவு அவரது தனிப்பட்ட முடிவு என்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ரோஹித் சர்மா தான் எடுத்துள்ளார். நாங்கள் எந்த ஒரு வீரருக்கும் அழுத்தம் கொடுப்பதில்லை. இதுதான் பிசிசிஐயின் கொள்கை என்று கூறியுள்ளார்.
“ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை, அவர் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன். இந்திய கிரிக்கெட் அணிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது.டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் அவரது முடிவை நாங்கள் வரவேற்கிறோம். எதிர்காலத்தில் அவரது அனுபவத்தையும் திறமையையும் ஒருநாள் போட்டிகளில் நிச்சயமாகப் பயன்படுத்துவோம், ”என்று அவர் கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
