சிங்கப்பூரில் அதிகரிக்கிறதா போதை புழக்கம்...!!!அதிகாரிகளின் பிடியில் சிக்கிய 82 நபர்கள்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தீவு முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு வகையான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இதன் தொடர்பில் 82 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு $130,000 என்று தெரியவந்துள்ளது.
சோதனை நடவடிக்கைகளானது திங்கள்கிழமை(16.06.25) முதல் வெள்ளிக்கிழமை(20.06.25) வரை ஆங் மோ கியோ, ரெட்ஹில், சாங்கி, பொங்கோல், உட்லேண்ட்ஸ் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
உட்பட $132,000 க்கும் மேற்பட்ட மதிப்புள்ள போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பில் 30 வயதுடைய இரண்டு வெளிநாட்டினரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறார்.
மேலும் அவர்களின் இருப்பிடத்தில் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு கிலோகிராமுக்கு மேல் கஞ்சா மற்றும் 19 கிராம் மெத்தம்பேட்டமைன், அத்துடன் போதைப்பொருள் உபகரணங்கள் மற்றும் $715.3 வெள்ளி ரொக்கத்தையும் கண்டுபிடித்தனர்.
காவல்துறையினர் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.