உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியை விரிவுப்படுத்த மலேசியாவிடம் இரு நிலங்களை வாங்க சிங்கப்பூர் திட்டம்!!

உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியை விரிவுப்படுத்த மலேசியாவிடம் இரு நிலங்களை வாங்க சிங்கப்பூர் திட்டம்!!

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியை விரிவுபடுத்துவதற்காக சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து 2 நிலங்களை வாங்கவுள்ளது.

அந்த தகவலை சிங்கப்பூர் நில ஆணையம் , குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தன.

சுமார் 0.76 ஹெக்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலப்பகுதிகள் சுங்கச்சாவடியை விரிவுபடுத்தும் பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது.அவை தற்போது பயன்படுத்தப்படாமல் இருப்பதாக கூறியது.

பரிவர்த்தனை குறித்து இரு ஆணையங்களும் மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்படும்.

இன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், சுங்கச்சாவடியில் ஏற்படும் நெரிசலுக்கு நீண்டகால தீர்வைக் காண முயற்சி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan