சுட்டெரிக்கும் வெயிலில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்..!!

சுட்டெரிக்கும் வெயிலில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்..!!

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி, கொளுத்தும் வெயிலில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்பை நடத்தியது.

மதியம் 2 மணி அளவில் உடற்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற சில மாணவர்களின் கைகளில் புண்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 9 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மாநில கல்வி அமைச்சின் நிதி உதவியில் இந்த உடற்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உடற்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களைப் பாராட்டி பள்ளி நிர்வாகம் காணொளி ஒன்றை வெளியிட்டது.

இந்த நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் மாணவர்களின் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால்,மாணவர்களை கொளுத்தும் வெயிலில் உடற்பயிற்சியில் ஈடுபடச் செய்தது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.