ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!!

ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!!

டெமு என்கிற ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிய ஒரு இந்தியப் பெண்,அந்தப் பொருட்களுக்கு ஸ்டிக்கர்களை மட்டுமே பெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவத்தை பற்றி அந்தப் பெண்ணின் மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டெமு என்ற சீன ஷாப்பிங் தளத்தில் ஷாப்பிங் செய்யும்போது அந்தப் பெண் சற்று கவனமாக இருக்காதால் ஸ்டிக்கர்களை வாங்கிவிட்டார்.

அவர் மலிவான விலையில் ஒரு வெற்றிட சுத்திகரிப்பான் மற்றும் சமையல் பாத்திரங்களை வாங்கியதாக நம்பினார்.

அவர் பொருட்களின் விவரங்களைச் சரிபார்க்கத் தவறிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து டெமு ஒரு அறிக்கையை வெளியிட்டது.

வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்குவதற்கு முன் தயாரிப்பு விவரங்களை கவனமாக படிக்க வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை விவரிக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு இதுவரை 2.2 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த ஒருவர் வயிறு குலுங்க சிரித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் பொருட்களை வாங்குவது ஒருவரை அந்த அளவுக்கு பாதிக்குமா என்று மற்றொருவர் கேட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலர் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.