தனது வித்தியாசமான யோசனை மூலம் 18300 வெள்ளியைச் சேமித்த நபர்..!!!

தனது வித்தியாசமான யோசனை மூலம் 18300 வெள்ளியைச் சேமித்த நபர்..!!!

சீனாவின் குவாங்டாங் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நான்கு மாடி கொண்ட வீடு இருந்தும் கடந்த நான்கு வருடமாக காரில் வசித்து வருகிறார்.

அவர்தான் நிரலாக்க நிபுணராய்ப் பணிபுரியும் 41 வயதான திரு.சாங் யுன்லாய்.

ஷென்சன் மாநிலத்தில் பணிபுரியும் அவர் அங்கு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

வேலை முடிந்ததும் அவர் வழக்கமாக வீட்டிற்குச் செல்வார்.

ஒருமுறை அவருக்கு பூங்காவில் முகாமிட்டு தங்கிய அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.

ஒவ்வொரு நாளும் அப்படி வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தார்.

அவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மின்சார வாகனத்தை வாங்கினார்.

காரின் பின் இருக்கையில் தூங்குவதற்கு போதுமான இடம் இருப்பதை திரு. சாங் உணர்ந்தார்.

வார நாட்களில்,அவர் வேலை முடிந்ததும் சாப்பிடுவார்.

பின்னர் ஜிம் குளியலறையில் குளிப்பார். அவர் காரை சார்ஜ் செய்துவிட்டு இரவில் அதில் தூங்குவார்.

அவர் வார இறுதி நாட்களில் மட்டுமே வீட்டிற்குச் சென்று தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார்.

இப்படி அவர் கடந்த 3 ஆண்டுகளில் தனது காரில் வசிப்பதன் மூலம் சுமார் 18,300 வெள்ளியைச் சேமித்துள்ளார்.

அவர் தனது சொந்த ஊரில் நான்கு மாடி வீடு வைத்திருப்பதாகவும், எந்த நிதி நெருக்கடியிலும் இல்லை என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர் வித்தியாசமான தனித்துவமான வாழ்க்கை முறையை ஒவ்வொரு நாளும் ரசிப்பதாக தெரிவித்துள்ளார்.