சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டவர்கள்!! இந்தோனேஷியாவுக்கு நாடு கடத்தப்பட்டது? ஏன்? எதனால்?
இந்தோனேசியாவின் பாலியில் உள்ள படாங் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவுக்குள் இரண்டு சந்தேக நபர்கள் நுழைந்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்த துப்பாக்கி சூட்டில் 32 வயதுடைய ஜிவான் ராட்மனோவிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 34 வயதுடைய சனார் கானிம் என்பவர் பலத்த காயமடைந்தார்.இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் கடந்த ஜூன் 14 ஆம் தேதி சனிக்கிழமை நடந்தது.
துப்பாக்கி சூடு நடத்திய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் பாலியில் இருந்து தப்பி செல்ல திட்டம் தீட்டியுள்ளனர்.அதற்கு ஏற்பாடு செய்த மூன்றாவது நபருடன் அவர்கள் இருவரும் இணைந்தனர்.
மூவரும் கம்போடியாவுக்கு செல்வதற்காக ஜகர்த்தாவின் சோகர்னோ- ஹட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு தப்பி சென்றனர்.ஆனால் அவர்களில் 27 வயதுடைய நபரை அதிகாரிகள் கைது செய்தனர். விமானத்தில் ஏறுவதற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்போடியாவுக்கு விமானத்தில் சிங்கப்பூர் வழியாக அவர்கள் சென்றதாகவும்,ஆனால் அங்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை சிங்கப்பூர் குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் உறுதிப்படுத்தியதாக 8 world தெரிவித்தது.
கம்போடியா அதிகாரிகள் அவர்கள் இருவரையும் இந்தோனேசியாவுக்கே திருப்பி அனுப்பினர்.இதனால் அவர்கள் சிங்கப்பூரிலும் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
உள்ளூர் விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி,நாட்டிற்குள் நுழையும் எந்தவொரு விமான நிறுவனமும்,விமானத்தில் நாடு கடத்தப்பட்ட பயணிகள் இருந்தால் குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
இதனையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விமானம் சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.ஜூன் 17 ஆம் தேதி அவர்களை இந்தோனேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று இந்தோனேசிய காவல்துறையினர் தெரிவித்தனர்.