முகம் பளபளவென ஜொலிக்க.. சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்...!!!
இன்றைய காலகட்டங்களில் பலர் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பியூட்டி பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவிடுகின்றனர். ஆனால் உண்மையில் செலவே இல்லாமல் நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும். அப்படி என்னென்ன பொருட்களை வைத்து நம் முகத்தை மெருகேற்றலாம் என்பதை பார்ப்போம்..
மஞ்சள்
மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. மஞ்சளில் இருக்கக்கூடிய ஆன்ட்டி செப்டிக் துகள்கள் முகத்தில் ஏற்படக்கூடிய பருக்களைக் குறைக்க உதவுகிறது.
வெள்ளரிக்காயை பேஸ்டாக அரைத்து அதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும்.பின்பு அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென மாறும்.
புளித்த தயிர்
புளித்த தயிருடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் மற்றும் தக்காளிச் சாறை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
கற்றாழை
கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் முகத்தை ஃபிரெஷ் ஆக வைத்துக் கொள்ள உதவும். வெள்ளரிச் சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். இப்படி செய்வதால் சரும சுருக்கங்கள் மற்றும் சரும பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
உலர்ந்த ரோஜா இதழுடன் சிறிது பன்னீர் மற்றும் சந்தனம் சேர்த்து தடவி வர முகம் பொலிவு பெறும்.
கடலை மாவு
கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். கடலை மாவுடன் சந்தனம் மற்றும் மஞ்சள் தடவி குளித்து வர முகம் பளபளப்பாகவும், அழகாகவும் மாறும்.
வேப்பிலை
வேப்பிலையில் இயற்கையாகவே கிருமி நாசினி உள்ளது.வேப்பிலை மற்றும் வெள்ளரியை ஒன்றாக அரைத்து முகத்தில் தடவி வந்தால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் குறையும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்பு அதில் இரண்டு ஸ்பூன் பால் மற்றும் மஞ்சள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால் முகம் பளிச்சென மாறும்.