என்ன...!!! நடந்தா முதுகு வலி போயிடுமா..!!! என்னங்க சொல்றீங்க...!!!
நீண்ட நேரம் மடிக்கணினியில் வேலை பார்ப்பது, அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, ஓய்வு நாட்களில் நீண்ட நேரம் படுத்துக்கொண்டே இருப்பது போன்ற காரணத்தால் பலருக்கும் கடுமையான முதுகுவலி ஏற்படுகிறது.
முதுகு வலி தானே இதற்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமா.. என்று நினைத்து அந்த முதுகு வலியுடன் சிலர் வாழ்ந்து வருகின்றனர். உண்மையில், முதுகு வலிக்கு மருத்துவ ஆலோசனை தேவையில்லை.
முதுகுவலியிலிருந்து விடுபட நடைப்பயிற்சி மட்டுமே போதுமானது. நடைப்பயிற்சி சென்றவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், முதுகுவலியால் அவதிப்படுபவர்களுக்கு நடைபயிற்சி மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. ஏனெனில் நடைப்பயிற்சி உடல் தசைகளை பலப்படுத்துகிறது.
நடைபயிற்சியின் போது உடலின் core எனப்படும் மையப்பகுதி நன்றாக வேலை செய்கிறது. இது உடலுக்கு சமமான அழுத்தத்தை அளிக்கிறது. மேலும் உடலின் தசைகள் தளர்வடைகின்றன, குறிப்பாக முதுகெலும்புடன் தொடர்புடைய தசைகள் தளர்வாகவும் வலுவாகவும் இருக்கும். இதனால் முதுகு வலி குறைகிறது.
தினமும் 10-20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் முதுகுவலி குணமாகும். உங்களுக்கு கடுமையான முதுகுவலி இருந்தால், உங்கள் உடல் அதைத் தாங்கும் வரை 30 நிமிடங்கள் நடக்கலாம்.
நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலை நிமிர்ந்து நேராக வைத்து ரிலாக்ஸ் ஆக நடக்க வேண்டும். தினமும் இப்படி நடப்பதால் உடல் நலம் மேம்படும், மனச்சோர்வு நீங்கும். உடலில் உள்ள பல உடல் உபாதைகள் குணமாகும்.