நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன?

நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன?

சிங்கப்பூரில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 39 பேர் மீது ஜூலை 26 ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.

35 ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என்று காவல்துறை காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே போக்குவரத்து காவல்துறை நடத்திய சோதனையில் பிடிபட்டனர்.

Breathalyser test செய்யும் போது அவர்கள் தோல்வியடைந்தனர்.

அவர்களில் 5 பேர் ஹில் ஸ்ட்ரீட்,ஜாலான் யூனோஸ், புக்கிட் திமா சாலை,பாயா லெபார் சாலை மற்றும் அப்பர் தாம்சன் சாலை ஆகிய இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தது மட்டும் இல்லாமல் மற்ற வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை விளைவித்ததாக கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள்.அவர்கள் ஐவரும் 33 முதல் 61 வயதுக்குட்பட்டவர்கள்.விசாரணையில் அவர்கள் மது போதையில் வாகனத்தை ஓட்டி காரில் தூங்கி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.