அட சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரே…!!! தொடர்ச்சியாக சிஸ்சர்களை தெறிக்கவிட்ட ரியான் பராக்…!!!

அட சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரே...!!! தொடர்ச்சியாக சிஸ்சர்களை தெறிக்கவிட்ட ரியான் பராக்...!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக இருந்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ரசல் அற்புதமாக விளையாடி 25 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, இருபது ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் கேப்டன் பராக் 95 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி 21 ரன்கள் மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் அற்புதமாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக், கேப்டன்களுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆறு சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார்.

மொயீன் அலி வீசிய 13வது ஓவரின் கடைசி ஐந்து பந்துகளிலும், பின்னர் வருண் சக்ரவர்த்தி வீசிய 14வது ஓவரின் முதல் பந்திலும் அவர் சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம், ஐபிஎல்லில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

சில வருடங்களுக்கு முன்பு, ரியான் பராக் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு ஓவரில் 5 சிக்ஸர் அடிப்பேன் என்று பதிவிட்டிருந்தார். ஆனால் ரியான் பராக் மோசமான ஃபார்மில் விளையாடி வந்தார். இந்நிலையில் அவர் சொன்ன மாதிரியே தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.