மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது...!!!

அமெரிக்காவில் $230 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டதாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
20 வயதான மலோன் லாம், 4,100 பிட்காயின்களைத் திருடி அவற்றைப் பணமாக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
மோசடி செய்பவர்கள் மற்றவர்களுக்குச் சொந்தமான டிஜிட்டல் நாணயக் கணக்குகளை அனுமதியின்றி அணுகியதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு வழிகளில் கணக்குகளிலிருந்து நிதியை மாற்றுவதன் மூலம் அவர்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
புதிய குற்றச்சாட்டுகளின் கீழ், லாம் அதிகமான நபர்களுடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
லாம் வாஷிங்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தனக்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.
13 சந்தேக நபர்களும் ஆன்லைன் கேமிங் தளங்கள் மூலம் நண்பர்களாக மாறியதாக நம்பப்படுகிறது.
அவர்கள் 263 மில்லியன் டாலர்களை (சுமார் 340 மில்லியன் வெள்ளி) சம்பாதிக்க சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் $250,000 (சுமார் 332,000 வெள்ளி) வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
