ஜொகூர் பாரு காபி கடையில் அரங்கேறிய கத்தி குத்துச் சம்பவம்..!!!

ஜொகூர் பாரு காபி கடையில் அரங்கேறிய கத்தி குத்துச் சம்பவம்..!!!

மலேசியாவின் ஜொகூர் பாருவில் உள்ள ஒரு காபி கடையில் இருந்த நான்கு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கும்பல் ஒன்று பாராங் கத்திகளாலும் தடிகளாலும் தாக்கியது.

தாக்குதல் தொடர்பாக விசாரணைக்காக 19 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஆக இளையவருக்கு 13 வயது என்று கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு சட்டவிரோத கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் 17 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 12.40 மணிக்கு ஸ்கூடாயில் உள்ள ஒரு காபி கடையில் நடந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேர் ஏற்கனவே குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர்.

இது பழிவாங்கும் செயலாக இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.