தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் $626700 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (CNCTU) தீவு முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் 14 வயது மாணவர் உட்பட 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த விவரத்தை தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சோதனை நடத்தப்பட்டது.
சோதனைகளானது அங் மோ கியோ, பூன் கெங், புக்கிட் மேரா, ஜூரோங் மற்றும் செங்காங் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்றது.
இந்தச் சோதனையில் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட போதை பொருட்கள்:
🔴ஹெராயின் – 3,588 கிராம்
🔴கஞ்சா – 2,744 கிராம்
🔴’ஐஸ்’ – 1,303 கிராம்
🔴கெட்டமைன் – 155 கிராம்
🔴எக்ஸ்டசி மாத்திரைகள் – 54 கிராம்
🔴கொக்கெய்ன் – 26 கிராம்
🔴213 எரிமின் – 5 மாத்திரைகள்
🔴 இ-சிகரெட் சாதனங்கள் – 49
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 626,700 வெள்ளிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு 2,840 போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பயன்படுத்தக்கூடிய அளவு என்று ஆணையம் தெரிவித்தது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan