விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!!

மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவிற்காக விவாகரத்து பெற்ற பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா முதல் முறையாக ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர்.
தனுஷ் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நவம்பர் 18, 2002 அன்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என 2 மகன்கள் பிறந்தனர். 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இருவரும் ஜனவரி 17, 2022 அன்று பிரிவதாக அறிவித்தனர்.இது ஒட்டுமொத்த திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, தனுஷ் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுவும் தாக்கல் செய்தார்.2 வருட நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, இறுதியாக நவம்பர் 27, 2024 அன்று அவர்களுக்கு முறையான விவாகரத்து வழங்கப்பட்டது.
தனது மகளும் மருமகனும் ஒன்றாக இணைவதற்கு ரஜினி மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் இறுதியில் தோல்வியில்தான் முடிந்தது.
இந்நிலையில் விவாகரத்துக்குப் பிறகு, தனுஷ் தனது பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல், ஐஸ்வர்யாவும் யோகா மற்றும் ஜிம் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் தனுஷ் தீவிர முருக பக்தர் என்பதால் அவ்வபோது முருகன் கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நேரத்தில்தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ராவுக்கு பள்ளிப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.மேலும் இந்த விழாவில் இருவரும் முதல் முறையாக ஒன்றாகக் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அவர்கள் கலந்து கொண்ட புகைப்படத்தை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பெருமைமிக்க பெற்றோர்” என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார்.விவாகரத்துக்குப் பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.
யாத்ரா சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இதற்காக அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவும் தனுஷும் இந்த நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
யாத்ரா தனது பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்தார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனது படிப்பை முடித்த பிறகு நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்தப் புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள ரஜினிகாந்த், யாத்ரா கன்னாவுக்கு வாழ்த்துக்கள்,தனது அன்புப் பேரன் முதல் மைல்கல்லைக் கடந்துவிட்டார் என பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan